Breaking

ஞாயிறு, 25 ஜூன், 2017

ஆசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய லேப்டாப்பின் சிறப்பம்சம் என்ன?

கணினி மற்றும் நோட்புக்குகளைத் தயாரிப்பதில் ஆசஸ் நிறுவனம் தனி முத்திரையைப் பதித்திருக்கிறது. மேலும் இந்நிறுவனம், பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது, ஆசஸ் தற்போது அறிமுகப்படுத்தும் லேப்டாப் பொருத்தமாட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது எனக் கூறப்படுகிறது, மேலும் இவற்றில் க்ரோம்புக் பிளிப் சி231 அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய லேப்டாப்பின் சிறப்பம்சம் என்ன?
இதன் முக்கியமான சிறப்பம்சம் பொருத்தவரை 360டிகிரி பிளிப் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் க்ரோம் ஒஎஸ்-ல் இயங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் டிஸ்பிளே பொருத்தமாட்டில் 11.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது.
இணைப்பு வசதிக்காக வைஃபை, ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி இணைப்பு ஆகியவைற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸென்புக் லேப்டாப்பின் ப்ராசஸர் இன்டல் கோர் ஐ5 அல்லது ஐ7 ஆகும். இதன் ஹார்டு டிரைவ் 256 ஜிபி சக்தியைக் கொண்டது. மேலும் இந்த லேப்டாப் மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், மினி விஜிஏ மற்றும் எர்த்நெட் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது.
இதன் ரியர் கேமரா பொருத்தமாட்டில் 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் 12மணி நேரம் செயல்படக் கூடிய பேட்டரி இதனுள் பொருத்தப்பட்டுள்ளது.
பக்காவான ஒலி அமைப்பிற்காக இந்த லேப்டாப்பில் சோனிக் மாஸ்டர் தொழில் நுட்பம் உள்ளது. அதனால் இதன் ஒலி அமைப்பு அதிரடியாக இருக்கும். இந்த லேப்டாப்பின் செயல் திறன் உண்மையாகவே அமர்க்களமாக இருக்கும். மேலும் இது ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக